×

மதுகுடிக்க பணம் தர மறுத்தவருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது

பண்ருட்டி, மார்ச் 15: பண்ருட்டி அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த உறவினரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தருக்கை கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் நாகப்பெருமாள் (48), விவசாயி. இவர் நேற்று முன்தினம் விசூரில் இருந்து தருக்கை செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இவரது உறவினர் காசி மகன் வேல்முருகன் (37), செந்தாமரை மகன் ராஜீவ்காந்தி (35) ஆகிய இருவரும் வந்தனர். அவர்கள் நாகப்பெருமாளிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் நாகபெருமாள் முகத்தில் சரமாரியாக குத்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த நாகப்பெருமாள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகப்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில்a முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகனை கைது செய்தனர். தலைமறைவான ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது