×

பாரில் அனுமதியின்றி வைத்திருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

திருப்புத்தூர், மார்ச் 15:  திருப்புத்தூர் டாஸ்மாக் பாரில் நேற்று அனுமதி இல்லாமல் 100 மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். திருப்புத்தூர் சிவகங்கை ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகேயே பார் உள்ளது. நேற்று இந்த பாரில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து திருப்புத்தூர் டவுன் போலீசார் சம்மந்தப்பட்ட பாருக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பாரில் 100 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக நகர வையிரவன்பட்டியைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் நாகலிங்கம்(47) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : arrests ,bar ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்