×

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தும் அகற்றாத அதிமுக அரசின் திட்ட பிளக்ஸ் போர்டு

காளையார்கோவில், மார்ச் 15:  காளையார்கோவில் பகுதியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு திட்டங்களுக்கான பிளக்ஸ் போர்டு அகற்றப்படாமல் உள்ளது. காளையார்கோவில் பகுதியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் அச்சிடப்பட்ட அரசு திட்டங்களுக்கான பிளக்ஸ் போர்டு அதிகாரிகளின் கவனக்குறைவால் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளது.

இதேபோல் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் உள்ள மகளிர் மன்ற கட்டிட வளாகத்தில் அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் அகற்றப்படாமல் உள்ளது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசு அலுவலகங்களில் பாரபட்சமின்றி அமுல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வல்கள் கூறினர்.


Tags : Planning Board ,AIADMK ,
× RELATED அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!