×

காளையார்கோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு அடிக்கடி ஏற்படும் டூவீலர் விபத்து

காளையார்கோவில், மார்ச் 15:காளையார்கோவிலில் ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே போவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இருவழிச்சாலையை ஒருவழிச் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காளையர்கோவிலில் உள்ள மதுரை தொண்டி நெடுஞ்சாலை 2012ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு இருவழிச் சாலையாக உள்ளது. தற்போது காளையார்கோவில் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கரிமிப்பு அதிகமாகிக் கொண்டே போவதால் இருவழிச் சாலை ஒருவழிச் சாலையாக மாறி வருவகின்றது.

மேலும் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து கல்லல், காரைக்குடி திரும்பும் வளைவு மற்றும் போலீஸ்ஸ்டேசன், பரமக்குடிக்கு திரும்பும் வளைவுகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன.விபத்துகளை தடுப்பதற்காக காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து சூசையப்பர்பட்டிணம் விலக்கு வரையிலும் உள்ள இருவழிச் சாலையை ஒருவழிச் சாலையாக தடுப்பணை அமைக்க வேண்டும் போலீஸ்ஸ்டேசன், பரமக்குடி மற்றும் கல்லல், காரைக்குடிக்கு திரும்பும் வளைவுகளில் ரவுண்டானா அமைத்து காலை மற்றும் இரவு நேரங்களில் டிராபிக் போலீசார் மூலம் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Tags : region ,Kalyarikov ,accident ,Tuweiler ,
× RELATED ஆன்மீகத்தை வைத்து தில்லுமுல்லு...