×

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

திருப்புத்தூர், மார்ச் 15: திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரம் வடுகபட்டியை சேர்ந்தவர் கணேசன்(59). இவர் நேற்று காலையில் ஓட்டலுக்கு தேவையான மளிகை பொருட்களை நாச்சியாபுரம் கடையில் வாங்கி கொண்டு டூவிலரில் சென்றார். சிறாவயல் பொட்டல் விலக்கு அருகே சென்ற போது, காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் டூவிலர் மீது மோதியது.இதில் தலையில் பலத்தகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் வண்ணிக்கோட்டையை சேர்ந்த ராமர்(50) என்பவரை கைது விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை