மதுரை, மார்ச் 15: மதுரையில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ராஜா உசேன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முகம்மது ஆதம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என உத்தரவாதம் கொடுத்து, அதனை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி வரும் அமமுகவுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் 40 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வது, பாஜ அரசை எதிர்க்கும் அமமுக கூட்டணி கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற களப்பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் அப்துல் நைனார், மாவட்ட செயலாளர் உசேன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.