×

கரூர் ராயனூர் பஸ் ஸ்டாப் அருகே சிமெண்ட் தளம் அமைக்காததால் குடிநீர் வீணாகி வரும் அவலம்

கரூர், மார்ச் 15: கரூர் ராயனூர் பஸ் ஸ்டாப் அருகே சிமெண்ட் தளம் அமைக்காததால் குடிநீர் வீணாகி வருகிறது.கரூர் ராயனூர் பஸ் ஸ்டாப் அருகே காவிரி குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீரேற்றம் செய்யும் இந்த குழாய்களை சுற்றிலும் சிமெண்ட் தளம் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த இடத்தில் தண்ணீர் குளம்போல தேங்கி கிடக்கிறது. தண்ணீர் அதிகமாக கசியும்போது சாலையில் வழிந்தோடுகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க உடனடியாக நகராட்சி நிர்வாகம் சிமெண்ட்தளம் அமைக்க வேண்டும் என இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Raayanur ,bus stop ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...