கரூர், மார்ச் 15: ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் குப்புசாமி(40). இவர் கரூர் திருமாலையூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். திருச்சி- திருப்பூர் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். அதிகாரிகள் வற்புறுத்தலின்பேரில் கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி இரவு, பகலாக பணி செய்துள்ளார். இந்நிலையில் தூக்கமின்றி மள உளைச்சலுக்கு உள்ளான குப்புசாமி கோட்ட கிளை நிர்வாகியை நேற்று சந்தித்து விடுமுறை தரும்படி கேட்டுள்ளார்.அதற்கு அதிகாரி சிறிது நேரம் காத்து இருக்கும்படி கூறியுள்ளார். இதனால் ஏமாற்றத்திற்குள்ளான குப்புசாமி டெப்போ அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.தகவலறிந்த பசுபதிபாளையம் போலீசார் அங்கு வந்து அதிகாரிகளிடம் கூறி விடுமுறை வாங்கி தருவதாக கூறியதையடுத்து குப்புசாமி போராட்டத்தை கைவிட்டார். இதனால் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.