×

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடக்கோரி எஸ்ஆர்எம்யூ பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச் 14:  புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன் எஸ்ஆர்எம்யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், 2004க்கு முன்பிருந்த கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்ற குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தகோரியும் உள்ளிட்ட ேகாரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன் எஸ்ஆர்எம்யூ சார்பில் நேற்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமை வகித்தார். இதில் அனைத்து கிளை தலைவர்கள், செயலாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags : pension scheme ,SRMU ,
× RELATED பழைய ஓய்வூதிய திட்டம் வலியுறுத்தி 15ம்...