×

திருப்பட்டூர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 14: திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.பிரம்மனுக்கு அருள்புரிந்து பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றியமைத்த வரலாறு கூறும் திருத்தலம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களுள் ஒன்று பங்குனி தேர் திருவிழா. இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடிமரம் முன்பு சிறப்பு யாகமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் 9 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ராணி ஆலோசனைப்படி கோயில் செயல் அலுவலர் முத்துராமன், அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...