×

தேர்தல் விதிமுறை மீறி முதல்வர் காப்பீட்டு அட்டை விநியோகம்

விருதுநகர், மார்ச் 14: தேர்தல் விதிமுறை மீறி, விருதுநகர் மாவட்டத்தில் தபால்காரர்கள் மூலம் முதல்வரின் காப்பீட்டு, திட்ட அட்டைகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, அனைத்து மாநிலங்களும் இலவசங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், விருதுநகர் பகுதிகளில் முதல்வர் மருத்துவர் காப்பீட்டு அட்டைகள் தபால்காரர் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் அரசு திட்டங்களும் செயல்படுத்தக் கூடாது என்பது விதி. ஆனால், விதிமுறைகளை மீறி காப்பீட்டு திட்ட அட்டைகளை விநியோகம் செய்கின்றனர். தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Principal ,
× RELATED பசுமை முதன்மையாளர் விருது தேர்வு கூட்டம்