×

காயங்களுடன் சுற்றிய மான் மீட்பு

திருப்புத்தூர், மார்ச். 14: திருப்புத்தூர் அருகே, நாய்கள் கடித்து, காயமுடன் சுற்றித்திரிந்த மானை வனத்துறையினர் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.திருப்புத்தூர் அருகே ஜமீன்தார்பட்டியில் நேற்று நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் புள்ளி மான் சுற்றி திரிந்துள்ளது. அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் விரட்டி கடித்தன. இதைப்பார்த்த கிராமத்தினர் நாய்களை விரட்டி விட்டு, திருப்புத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனவர் சம்பத் தலைமையிலான வனத்துறையினர் சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி, அப்பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த மானை பிடித்தனர். பின்னர் காயம்பட்ட மானை கண்களில் துணியை கட்டி அலவாக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மதகுபட்டியில் உள்ள மண்மலை வனப்பகுதியில் பாதுகாப்பாக மானை விட்ட்டனர்.


Tags :
× RELATED மது விற்றவர் கைது