×

42 வழக்குகள் ஒத்திவைப்பு நின்ற லாரியில் டூவீலர் மோதி கட்டிட ெதாழிலாளி பலி

திருமங்கலம்,மார்ச் 14: திருமங்கலம் அருகே பழுதாகி நின்ற லாரியில் மோதி டூவிலரில் சென்றவர் உயிரிழந்தார்.திருமங்கலம் அருகேயுள்ள கல்லணையை சேர்ந்தவர் புதூர் கணேசன் (40). கட்டிட தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் கண்ணன் (40). நேற்று இருவரும் திருமங்கலத்திற்கு கட்டிட வேலைக்கு டூவிலரில் வந்தனர். டூவீலரை கணேசன் ஓட்டி வந்தார். விருதுநகர்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சமத்துவபுரம் அருகே கோட்டூரிலிருந்து மதுரைக்கு மண் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. லாரி நிற்பதை கவனிக்காமல் கணேசன் லாரியில் மோதவே டூவிலருடன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார். படுகாயமடைந்த கண்ணன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : servant ,Tuweiler ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50...