×

மாவட்டம் ஓட்டு போடுவது எப்படி?

திருப்பரங்குன்றம், மார்ச் 14: நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஓட்டு போட பயிற்சி கொடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மதுரை மன்னர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு எப்படி வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.தாசில்தார் நாகராஜ் கலந்து கொண்டு ஒவ்வொரு மாணவரும் கட்டாயமாக வாக்களிப்பது குறித்து பேசினார். தொடர்ந்து வருவாய்த்துறையினர் புதிதாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்கி காட்டினர். பின்னர் வாக்களித்த உடனே அதன் சின்னத்தை இயந்திரத்தின் முன்புறம் உள்ள சிறிய திரை வெளிச்சமிட்டு காட்டும். அதன்மூலம் நாம் வாக்களித்த பேட்பாளரின் சின்னத்தை உறுதிபடுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தினர். இதில் துணை வட்டாட்சியர் மீனாடசி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாணவிகள் கூறுகையில், ‘இது ஒரு முன்னோட்டமாக அமைந்தாலும், தேர்தல் நாளை எதிர்பார்த்து அந்நாளில் வாக்களிப்பதில்தான் எங்கள் மகிழ்ச்சி அதிகம்’ என்றார்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்