×

நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு 3,500 டன் ரேஷன் அரிசி வரத்து

நாமக்கல், மார்ச் 14: நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு 3,500 டன் ரேஷன் அரிசி நேற்று வந்தது. நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வடமாநிலங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் கோழித்தீவன மூலப்பொருட்கள் கொண்டு வரப்படும். நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து, சரக்கு ரயிலில் 3,500 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது. அரிசி மூட்டைகளை 160 லாரிகளில் சுமைதூக்கும் பணியாளர்கள் ஏற்றி, மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு கொண்டு சென்றனர்.

Tags : railway station ,Namakkal ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!