×

மணல் கடத்திய 3 டிராக்டர் பறிமுதல்

நாகை, மார்ச் 14: நாகையில் மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் வைத்தீஸ்வரன் கோயில் சரகம் கதிராமங்கலம் மெயின்ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக உரிய அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், டிராக்டரை ஓட்டி வந்த மேலகொண்டத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த நடராஜன் மகன் ராஜதுரை (24), அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ரமேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மேலவாடி அருகே நடந்த வாகன சோதனையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 டிராக்டரை நிறுத்த முயற்சி செய்தபோது அதனை ஓட்டி வந்தவர்கள் தப்பிவிட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்