கரூர், மார்ச். 14: வேலாயுதம்பாளையம் அருகே வாட்டர் பம்ப் ஆப்ரேட்டர் மாரடைப்பால் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(46). இவர், கரூர் காகிதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வாட்டர் பம்ப் ஹவுசில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர், அங்கேயே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உறவினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் வடிவேலுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.