×

சித்தப்பாவை அடித்து உதைத்த முன் விரோதத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம், மார்ச் 14: துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது, பஸ் நிறுத்தம் அருகே வாலிபர், 3 பேர் சரமாரியாக வெட்டினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை போரூர் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பழனி (35). காஞ்சிபுரம் அடுத்த கூத்தரம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் இவரது அத்தை, கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.  இதையொட்டி துக்க நிகழ்ச்சிக்கு பழனி நேற்று முன்தினம் சென்றார். நிகழ்ச்சி முடிந்து பழனி, ஆலப்பாக்கம் புறப்பட்டார்.இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த, 3 பேர், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் பழனியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், உயிருக்கு போராடிய பழனியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.  அதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த மணவாளன் (25), கோகுல் (28), விஜி (எ) விஜய் (29) ஆகியோர் பழனியை வெட்டியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனி, மணவாளனின் சித்தப்பாவை அடித்து உதைத்துள்ளார்.  இந்த முன் விரோதம் காரணமாக காஞ்சிபுரத்துக்கு வந்த பழனியை 3 பேரும் வெட்டியது தெரியவந்தது.

Tags : fight ,kittens ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது