×

அனைத்து அமைப்புகள் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 14: காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. மார்ச் 8ம் தேதி சர்வதேச அளவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சப் கலெக்டர் சரவணன்
தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. தாசில்தார்கள், கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சப் கலெக்டர் சரவணன் பரிசுகள் வழங்கினார்.

அதேபோல் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காரைப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்துக் கழக பெண் ஊழியர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான சேலை அணிந்துவந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்திய மருத்துவர்கள் சங்கம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்திய மருத்துவர்கள் சங்க காஞ்சிபுரம் கிளை தலைவர் பி.டி.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவத்துறையில் சாதனை படைத்த மகளிர்கள் மற்றும் மருத்துவத்துறையில் மகளிரின் மகத்தான பங்கு குறித்து பேசினர். இதில் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பெண் மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

Tags : Women's Day Celebration ,organizations ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!