×

மாவட்டம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 46,135 பேர் எழுதுகின்றனர்

திருவள்ளூர், மார்ச் 14:  திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கி, 29ம் தேதி வரை 167 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வினை 21,280 மாணவர்கள், 24,855 மாணவியர்கள் என மொத்தம் 46,135 பேர் எழுதுகின்றனர்.புழல் சிறைவாசிகளுக்கென மத்திய சிறையில் ஒரு தேர்வு மையம் அமைத்து 51 சிறைவாசிகள் தேர்வு எழுதுகின்றனர். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 19 பேர், நேத்ரோதயா சிறப்பு பள்ளியில் 3 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இன்று துவங்கும் தமிழ் முதல் தாள், 18ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், 20ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 22ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆகிய தேர்வுகள், பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற மூன்று தேர்வுகள் வழக்கம்போல காலை 10 மணிக்கு துவங்கி, 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : election ,district ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...