சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி ஆச்சாரி முத்து நகரை சேர்ந்தவர் அருள் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். மேலும் வீட்டில் புறா மற்றும் குருவிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் வளர்த்த புறா நேற்று காணாமல் போயிருந்தது. இதையடுத்து புறாவை தேடிச்சென்ற மாணவர் புறா அப்பகுதியில் உள்ள திருவல்லிக்ேகணி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள மின்கம்பிகள் மீது அமர்ந்திருப்பதை கண்டு மாணவர் மின்சார கம்பிகள் மீது ஏறி புறாவை எடுக்க முயற்சி செய்த போது மின்சாரம் பாய்ந்து அப்பகுதியில் உள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டார்.