×

மர்ம ஆசாமிகளால் ஏலகிரி மலையில் மீண்டும் காட்டு தீ: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை, மார்ச் 14:ஏலகிரி மலையில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சில தினங்களுக்கு முன் மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதனால், மலையின் பல்வேறு இடங்களில் தீ பரவி மளமளவென்று எரிந்தது. இதில் பல வகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இந்நிலையில், மீண்டும் ஏலகிரி மலையில் உள்ள கொட்டையூர் பகுதியில் நேற்று மதியம் 1 மணி மணியளவில் திடீரென தீபற்றி எரிந்தது. இதனால், ஏலகிரி மலை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும், அடிக்கடி மர்ம ஆசாமிகள் தீ வைப்பதால் ஏலகிரி மலையில் வாழும் சிறிய வகை உயிரினங்கள் மற்றும் மூலிகை செடிகள், மரங்கள் அழிந்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும், இதுபோன்ற சம்பவங்களால் வனத்துறையினரும் தீயை அணைப்பதற்கு போதுமான நீர் வசதி இல்லாமலும், தீயணைப்புத் துறை சார்பில் போதுமான வாகன வசதியும் இல்லாமல் செடி கொடிகளை கட்டி எடுத்து அதன் மூலம் தீயை அணைத்து வருகின்றனர். இதனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீ வேகமாக பரவி இயற்கை வளங்கள் எரிந்து சாம்பலாகிறது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் மலையில் தீ வைக்கும் மர்ம ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Yelagiri Mountain ,Mysterious Assassins ,
× RELATED ஏலகிரி மலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு கூட்டம்