×

நண்பருடன் வீட்டிலேயே ஓரின சேர்க்கை தட்டிக்கேட்ட மனைவி மீது உருட்டுக் கட்டை தாக்குதல்: போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியராஜன் (28). பொறியாளர். இவருக்கும், 25 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் தனது கணவர், அவரது ஆண் நண்பருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்ததால் உருட்டு கட்டையால் அடித்து விட்டதாக பரபரப்பு புகாரை அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தபோது அதிர்ச்சிகர தகவல் வெளியானது. மேலும் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: இந்த விவகாரத்தில் 25 வயது பெண் தனது பெற்றோர் விருப்பத்தின் படி பாண்டியராஜனை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகு இருவரும் தேனிலவுக்கு வெளியூர் சென்றபோது பாண்டியராஜன் தனது நண்பர் தினேஷை அழைத்து சென்றுள்ளார். தேனிலவின் போது ஓட்டலில் அறை எடுத்து 3 பேரும் தங்கி உள்ளனர்.

அப்போது மனைவியை விட்டுவிட்டு பாண்டியராஜன் தனது நண்பருடன் தனியாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணி செய்வது அறியாமல் தவித்துள்ளார். பல கணவுகளுடன் தேனிலவுக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மகள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் தவித்துள்ளனர். இதற்கிடையே அடிக்கடி தினேஷை வீட்டிற்கு அழைத்து பாண்டியராஜன் தனி அறையில் ஒன்றாக இருந்துள்ளார். இதுகுறித்து ராணி, கணவரின் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் அவன் சிறு வயதில் இருந்து அப்படிதான், திருமணத்திற்கு பிறகாவது மாறிவிடுவான் என்று பார்த்தோம். ஆனால் அப்படி தான் இருக்கிறான். எனவே நீ தான் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே கடந்த 8ம் தேதி பாண்டியராஜன் வீட்டில் தினேஷுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டிருந்தபோது ராணி கணவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு பாண்டியராஜன், ‘‘எங்களுடன் நீ வாழ வேண்டும் என்றால் சேர்ந்து கொள். மூன்று பேரும் ஒன்றாக இருக்கலாம்’’ என கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியராஜன் உருட்டு கட்டையை எடுத்து ராணியை கடுமையாக தாக்கி உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : house ,
× RELATED பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல்...