×

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

திருவெறும்பூர், மார்ச் 12:  திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள  காட்டூர் பாரதிதாசன் நகர் நான்காம் தெருவை சேர்ந்தவர்  ஜெயபால் (55). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென வீட்டின் உத்திரத்தில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்றுகாலை கணவர் தூக்கில் தொங்குவதை கண்ட அவரது மனைவி துர்கா  அதிர்ச்சியடைந்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஜெயபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Tags : painter ,suicide ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை