×

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா இன்று துவக்கம் 20ம் தேதி தெப்போற்சவம்

திருச்சி, மார்ச் 12: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியா தெப்போற்சவம் வருகிற 20ம்தேதி நடைபெறுகிறது.திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்போற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு தெப்பத்திருவிழா இன்று காலை 10.45 மணிமுதல் 11.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி கேடயம், காமதேனு, கமலம், அன்னம், ரிஷபம், பல்லக்கு, சிம்மம், பல்லக்கு ஆகிய வாகனங்களில் 19ம் தேதி வரை வீதி உலா வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20ம் தேதி தெப்போற்சவம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5மணிக்கு மேல் சுவாமி பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் கண்டருள புறப்படுகிறார். இரவு 7மணியளவில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி தெப்பத்தை 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். சுவாமி, அம்பாள் தெப்பம் கண்டருளிய பின்னர் கோயிலுக்கு செல்கின்றனர். உற்சவத்தின் நிறைவு நாளான வருகிற 21ம் தேதி காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சண்டிகேஸ்வரர் புறப்பாடும், தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் விஜயராணி உள்பட கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Terrace festival ,temple ,Tiruchirappalli ,
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...