×

அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றம்

கெங்கவல்லி, மார்ச் 12: நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்றும் பணியில், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள்,  டிஜிட்டல் பலகைகள், கட்சி சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் அனைத்தும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பொது இடங்களில் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடி கம்பங்களை தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ளும்படி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : parties ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...