×

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தவர் மின்சாரம் தாக்கி பலி

போச்சம்பள்ளி, மார்ச் 12:  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே காரமூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி(50). கூலி தொழிலாளியான இவர், நேற்று காலை பண்ணந்தூரில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் உள்ள தென்னை மரத்தில் ஏறி, தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் சென்று கொண்டிருந்த மின்கம்பியின் மீது அவரது கை பட்டது. இதில், சின்னசாமியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில், மரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சின்னசாமி,  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்