×

பள்ளி ஆண்டு விழா

பாபநாசம், மார்ச் 12: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள பட்டுக்கோட்டை அழகிரி  தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். ஆசிரியை சியாமளா வரவேற்றார். தலைமை  ஆசிரியை கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். கைலாசம், ராசேந்திரன், செயராமன், கணேசன் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியை பொய்கை, வக்கீல் முருகவேலு, முகம்மது சாதிக் பாட்சா கருத்துரையாற்றினர். ராஜீ சிறப்புரையாற்றினார். பல்வேறு  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை  பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவன துணைத்தலைவர் தங்கராசு வழங்கினார்.

Tags : festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...