×

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்

சேதுபாவாசத்திரம், மார்ச் 12: கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதனால் சேதுபாவாசத்திரம் பகுதியில் வேரோடு சாய்ந்து விழுந்த லட்சக்கணக்கான தென்னை மரங்களால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அரசு அறிவித்த தென்னை நிவாரணம் இன்னும் 25 சதவீதம் பேருக்கு கிடைக்காமல் பல்வேறு இடங்களில் சாய்ந்துபோன தென்னை மரங்கள் அப்புறபடுத்தப்படாமல் உள்ளது. இதனால் காரைக்குடி இயல் இசை நாடக சங்கம் சார்பில் நாடகங்கள் மூலம் கிடைக்க பெறும் நிதிகள் மற்றும் வெளியூர், வெளிநாடு நண்பர்கள் மூலம் நிதிகள் பெற்று தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வருகின்றனர்.

சேதுபாவாசத்திரம் அடுத்த கழனிக்கோட்டை, குருவிக்கரம்பை பகுதிகளில் சங்க தலைவர் காந்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் செயலாளர் சுகுமாரன், துணைத்தலைவர் கண்ணன், துணை செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் பலர் பங்கேற்று ரூ.5 லட்சம் மதிப்பில் கழனிக்கோட்டையில் 1,500 தென்னங்கன்று, குருவிக்கரம்பையில் 1,500 தென்னங்கன்றுகள் வழங்கினர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...