×

அதிமுக-பாஜ கூட்டணியில் மதவாதம் முன் நிறுத்தப்படுகிறது பிருந்தாகாரத் பேட்டி

கறம்பக்குடி, மார்ச் 12: அதிமுக- பாஜ கூட்டணியில் மதவாதம்தான் முன்நிறுத்தப்படுகிறது என்று பிருந்தாகாரத் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசியல் தேர்தல் நிதியளிப்பு விழா கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடைபெற இருக்கின்றன நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுக -பிஜேபி கூட்டணியில் மதவாதம் தான் முன்நிருத்தபடுகிறது. இதனால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கே தெரியாமல் பேரம் நடைபெற்றுள்ளது.

36 ரபேல் போர் விமானங்கள் பேரம்  பற்றி எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் மாநிலங்கவையில்  கேள்வி கேட்டபோதும் மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் கேள்வி கேட்ட போதும் பிரதமர் மோடி இதுநாள் வரை ஒரு நாள் கூட உண்மையை பேசியதில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினால் இதுநாள் வரை பதில் கூறாமல் அவர்களை பேச விடாமல் தடுக்கும் வகையில் நடந்துகொள்கிறார் மோடி. எனவே இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற, நாட்டை காப்பாற்ற மதவாத சக்தியான மோடி அரசை தூக்கி ஏறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Prithviraj ,AIADMK ,coalition ,BJP ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...