×

குளித்தலை ஆதி நத்தத்தில் அரசு பள்ளி ஆண்டு விழா

குளித்தலை, மார்ச் 12: குளித்தலை கல்வி மாவட்டம் ஆதிநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு குளித்தலை வட்டாரக் கல்வி அலுவலர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை கீதா அனைவரையும் வரவேற்றார். ஆண்டறிக்கையை பட்டதாரி ஆசிரியை உஷா வாசித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு நிதி வழங்கிய பெற்றோர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இதில் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரிய பயிற்றுனர்கள் ராகுகாலம், ஜெயலெட்சுமி, ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தலைவர் மணிகண்டன், தலைமை ஆசிரியர்கள் சித்ரா தேவி, பழனிவேலு, அன்பரசி, முத்துலெட்சுமி, ரவி, தேக்கமலை, சத்தியபாமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவையொட்டி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.


Tags : ceremony ,government school ,Bathinda Adi Natra ,
× RELATED தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள்...