×

டூவீலர்-லாரி மோதல்: 2 பேர் பரிதாப பலி

திருச்சுழி.மார்ச் 12: திருச்சுழி அருகே, ரெட்டியப்பட்டியை அடுத்த மறவர் பெருங்குடியைச் சேர்ந்த சாமிநாதன், கந்தசாமி மற்றும் மதுரை பாலமேட்டை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர், டூவீலரில் அருப்புக்கோட்டை சென்றனர். ரெட்டியபட்டியை அடுத்த கத்தாளம்பட்டி விலக்கில், அருப்புக்கோட்டையிலிருந்து சாயல்குடி பிரதான சாலையில், தனியார் கிரஷர் அருகே, முண்டுக்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில், சாமிநாதன் மற்றும் கந்தசாமி சம்பவயிடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ராஜேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Duweiler-Larry Clash ,Pity Kills ,
× RELATED டிரான்ஸ்பார்மரை சீரமைத்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாப பலி