×

சாலைப் பாதுகாப்பு குறித்து டூவீலரில் விழிப்புணர்வு பயணம்

திருப்புத்தூர், மார்ச் 12:  திருப்புத்தூரில் நேற்று முன்தினம் மாலை மார்த்தாண்டம் ஜே.சி.ஐ. அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் டூவீலரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜே.சி.ஐ. இளைஞர்கள் மக்களிடையே சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட டூவீலர் பேரணியை 10 மாவட்டங்களில் கடந்த 8ம் தேதி தொடங்கி நடத்தி வருகின்றனர். திருப்புத்தூருக்கு நேற்று முன்தினம் மாலை வந்த இளைஞர்கள் நகரின் முக்கிய வீதிகளில் துண்டு பிரசுரம் மூலம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் வாகனத்தில் இருக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும், வேகக்கட்டுப்பாடு, உள்ளிட்ட 23 வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் இந்த அமைப்பினர் 10 டூவீலர்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தங்களது விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்திவிட்டு வரும் மார்ச் 11ம் தேதி அன்று கன்னியாகுமரியில் முடிக்க உள்ளனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்