×

ஆனையூரில் வீடு புகுந்து 1 1/2 கிலோ வெள்ளி திருட்டு

மதுரை, மார்ச் 12:  மதுரை ஆனையூரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். 10ம் தேதி மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 4 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி, ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து நாகேந்திரன் அளித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : house ,Ayanur ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி