×

கபடி போட்டி

சோழவந்தான், மார்ச் 12:சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. அம்மா பேரவை ஒன்றிய பொருளாளர் குருசெந்தில் தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, கிளை செயலாளர்கள் பழனியாண்டி, மாடசாமி முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் துரைப்பாண்டி வரவேற்றார். 2 நாட்கள் நடந்த போட்டியில் மாவட்ட அளவில் 32 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதியில் பாலகிருஷ்ணபுரம் மூர்த்தி நினைவு கபடி குழு அணி முதலிடத்தை பிடித்து ரூ.10,071 ரொக்க பணத்தையும், சுழற்கோப்பையும் வென்றது. மேலமடை எஸ்எப்சி சரவணன் கிளப் அணி இரண்டாமிடத்தையும், பழங்காநத்தம் யுகேஎன் அணி மூன்றாமிடத்தையும் பிடித்து ரொக்கப்பணம், சுழற்கோப்பையை பெற்றன. இதில் அதிமுக நிர்வாகிகள் கோபி, பழனிகணேஷ், செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை