×

வாடிப்பட்டி அருகே பயங்கரம் இன்றைய நிகழ்ச்சிகள் வெவ்வேறு விபத்துகளில் தம்பதி உள்பட 3 பேர் பலி

மதுரை, மார்ச் 12: மதுரை சதாசிவம் நகரை சேர்ந்தவர் முகமதுகனி (51). இவரது மனைவி பர்வீன்பானு(49). இருவரும் நேற்று முன்தினம் இரவு ஊமச்சிகுளம் பகுதியில் இருந்து நியூ நத்தம் ரோட்டில் மதுரையை நோக்கி வந்தனர். அய்யர்பங்களா அருகே வரும்போது, எதிரே வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முகமதுகனி உயிரிழந்தார். படுகாயமடைந்த பர்வீன் பானு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். மற்றொரு விபத்து: மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(21). இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் தல்லாகுளம் அவுட்போஸ்ட் அருகே வந்த போது, அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Terror ,events ,accidents ,
× RELATED புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட...