×

ஸ்பிக்நகரில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு

ஸ்பிக்நகர், மார்ச் 12: ஸ்பிக்நகர் அருகே உள்ள சுந்தர்நகரில் பராமரிப்பின்றி சேதமடைந்த மின்கம்பம் தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், ஸ்பிக்நகர், சுந்தர்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சுந்தர்நகரில் அமைந்துள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையானது 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். சாலையின் அருகே உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. மின்கம்பத்தின் உட்பகுதியில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு ஆபத்தான நிலையில் காட்சியளித்தது.  இதனால் அந்த பகுதியில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வந்தனர். இதையடுத்து 54வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சீரமைக்க கோரிக்கை விடுத்து போர்டு வைத்தனர். இது குறித்த செய்தி கடந்த 27ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றினர். இதனால் அந்த சாலையின் வழியாக செல்வோர் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி