×

வீடு புகுந்து 5 பவுன் நகை கொள்ளை

கோவில்பட்டி, மார்ச் 12: கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி சாந்திநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (38). இவரது மனைவி அய்யம்மாள் (34). இவர்களுக்கு காவ்யாதேவி, மனுஷா (10) ஆகிய 2 மகள்களும், கவுதம்குமார் (17) என்ற மகனும் உள்ளனர். பாலமுருகன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். கூசாலிபட்டியில் உள்ள தீப்பெட்டி கம்பெனியில் அய்யம்மாள் வேலை பார்த்து வருகிறார். மூத்த மகள் காவ்யாதேவி சென்னையில் படித்து வருகிறார். கவுதம்குமார் 11ம் வகுப்பும், மனுஷா 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டின் கதவை பூட்டி விட்டு அய்யம்மாள் கோவில்பட்டியில் உள்ள வங்கிக்கு நூறுநாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக வங்கி கணக்கு தொடங்க சென்றார். பின்னர் அவர் வங்கியில் இருந்து மாலை 4 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற அய்யம்மாள், பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் அய்யம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...