×

வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை

திருவள்ளூர், மார்ச்12: வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் நகைகள் கொள்ளை யடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பொன் அரும்பு (55). இவர் கடந்த 2ம் தேதி காலை தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம்  திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 15 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம  நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். செவ்வாப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குள் மட்டும் கடந்த 11 மாதங்களில் 150க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள்  நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : house ,surrender robbery ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்