×

பைக்குகள் திருடிய வாலிபர் கைது: 2 சிறுவர்களும் சிக்கினர்

வேளச்சேரி: சென்னை திருவான்மியூர் பகுதிகளில் பைக் திருடியவன் புழல் நிறையில் அடைக்கப்பட்டான். அவனது நண்பர்கள் இருவர் சீர்த்திருத்த பள்ளியில் போலீசார் சேர்ந்தனர்.சென்னை சாஸ்திரி நகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெசன்ட் அவென்யூ சாலையில், போலீசார் சென்றபோது, 3 பேர் ஒரே பைக்கில் சந்தேகப்படும்படி சுற்றினர். உடனே போலீசார்,  அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்த பைக், அதே பகுதியை சேர்ந்த ஷோரும் ஒன்றில் லாக்கை உடைத்து திருடியது தெரிந்தது. இதையடுத்து, 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.

அதில், ஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ராஜிவ் (19), என தெரியவந்தது. மற்ற 2 பேர் அவரது நண்பர்கள் 13 மற்றும் 17 வயது மதிபுள்ள சிறுவர்கள் என தெரியவந்தது. மேலும் விசாரணையில், 3 பேரும் நீலாங்கரை, அடையாறு,  திருவான்மியூர், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் 6 பைக்குகளை திருடியது தெரியவந்தது.வீட்டின் முன் நிறுத்தி இருக்கும் விலை உயர்ந்த பைக்குகளை, இவர்கள் திருடி ஜாலியாக ஓட்டிவிட்டு பெட்ரோல் தீர்ந்ததும் அங்கேயே நிறுத்திவிட்டு சென்றதும் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், 5  பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார், வழக்கு பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜர்படுத்தினர். ராஜிவை புழல் சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களையும் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில்  ஒப்படைத்தனர்.


Tags : boys ,
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு