×

‘ஜெயலலிதா விட்டுச்சென்ற திட்டங்களை தொடருகிறோம்’

சிவகாசி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மேலும் பேசுகையில், ‘‘ஜெயலலிதா விட்டு சென்ற திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். ஏழை எளிய வீட்டு பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற  அடிப்படையில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா அன்னதான திட்டத்தை கொண்டு வந்தார். ஏழை எளிய மக்களின் நாடி நரம்புகளில் ஜெயலலிதா இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். தங்கம் வெட்டி எடுக்கின்ற பெல்ஜியம் நாட்டில் கூட ஒருகிராம் தங்கத்தை ஓசியாக கொடுக்க மாட்டார்கள். ஆனால் தாலிக்கு தங்கம் வழங்கி ஏழை வீட்டு பிள்ளைகளை கரைசேர்த்தவர் ஜெயலலிதா. அண்ணா திமுக இயக்கம் இல்லாத கிராமங்கள் கிடையாது. தற்போது நடைபெறும் நல்லாட்சியில் ஏராளமான பாலங்கள், புதிய பஸ் வழித்தடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

Tags : Jayalalithaa ,
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...