தேனி, மார்ச் 8: தேனி அருகே சோலைத்தேவன்பட்டியில் அடிப்படை வசதிகேட்டு தமிழ்புலிகள் அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் முன்பாக மலம்கொட்டும் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற 41 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று அடிப்படை வசதிகோரி மலம் கொட்டும் போராட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் அலெக்சாண்டனர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தேனி அருகே சோலைத்தேவன்பட்யில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர், கழிப்பறை, சாலைவசதி செய்து தர பலமுறை கேட்டும் கிடைக்காததால் மலம் கொட்டும் போராட்டம் நடத்துவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட அலெக்சாண்டனர் உள்ளிட்ட 41 பேரை தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.