×

பழநி ஓட்டலில் காலாவதி இறைச்சி, பால் பறிமுதல்

பழநி, மார்ச் 8: பழநியில் உள்ள ஓட்டலில் காலாவதியான இறைச்சி, பால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு தனியார் அசைவ  ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் சிக்கன் பிரியாணி  பார்சல் வாங்கினார். வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து பார்த்தபோது அதிலிருந்த இறைச்சி கெட்டுப்ேபான வாசம் வந்துள்ளது. இதுகுறித்து அவர் சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையரகத்திற்கு புகார் அளித்தார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக நேற்று மாவட்ட நியமன அலுவலர் நடராஜன், பழநி உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர்  ராமமூர்த்தி உள்ளிட்டோர் அந்த ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சமையலறை, இறைச்சி  பதப்படுத்தப்படும் பிரிட்ஜ்ஜை சோதனை செய்தனர். இதில் 3 கிலோ கெட்டுப்போன  இறைச்சி, 2 லிட்டார் காலாவதியான பாக்கெட் இருப்பது தெரிந்தது. அதிகாரிகள் உடனே இவற்றை  பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இதுகுறித்து கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
 

Tags :
× RELATED சாலை விபத்தில் வாலிபர் பலி