×

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 8: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சவுரியப்பன் மகன் அந்தோணி(40). விவசாயியான இவர், நேற்று மாலை திம்மசந்திரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, 4 யானைகள் ஒரே நேரத்தில் திம்மசந்திரம் காட்டுப்பகுதியிலிருந்து வந்தன. காட்டை விட்டு திடீரென வெளியே வந்த யானைகளை கண்டதும், சவுரியப்பன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது, ஒரு யானை சவுரியப்பனை சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அங்குள்ள குழியில் விழுந்த சவுரியப்பனை, யானைகள் அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தன. சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று, சவுரியப்பனை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சவுரியப்பனை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அந் த பகுதியில் பர பரப் பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : attack ,Dhenkanikkottai ,
× RELATED பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி...