×

சிவத்தையாபுரத்தில் பாஜ கொடியேற்று விழா

ஏரல், மார்ச் 8: சிவத்தையாபுரத்தில் பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்  பாஜ கொடியேற்றினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். சாயர்புரம் அருகே சிவத்தையாபுரத்தில் நடந்த விழாவில் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்று பாஜ கொடியேற்றினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்தப் போவது பாஜ மட்டும்தான். இது அனைவருக்கும் தெரியும். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் ஒவ்வொரு விவசாயியின் வங்கி கணக்கிலும் இத்தொகை டெபாசிட் ஆகி வருகிறது. இந்த தொகையை பெற ரூ.100, ரூ.200 கொடுக்க வேண்டியதில்லை. அரசு வழங்கும் பணம் நேரடியாக கைக்கு வருகிறது என்றால் அது மோடி ஆட்சியில் மட்டும்தான் சாத்தியம். இதுபோன்ற நல்லாட்சி தொடர பாஜ கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
விழாவில் மாநில துணை தலைவர் காந்தி, மாவட்ட தலைவர் பாலாஜி, துணை தலைவர் செல்வராஜ், கோட்ட பொறுப்பாளர் ராஜா, மாவட்ட செயலாளர் வீரமணி, விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், உள்ளாட்சி பிரிவு செயலாளர் ராஜன், பிரசார பிரிவு செயலாளர் பிச்சலிங்கராஜ், சாயர்புரம் நகர தலைவர் பெரியசாமி, துணை தலைவர் மகேந்திரன், நிர்வாகிகள் ரத்தினகுமார், சக்திவேல், ஜெகதீசன், மாதவன், துரைசேகர், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடாந்து ஏரலில் பாஜ அலுவலகத்தை தமிழிசை சவுந்தர்ராஜன் திறந்து வைத்து கொடியேற்றினார். நிகழ்ச்சியில் ஏரல் நகர தலைவர் பரமசிவன், பொதுச்செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் அருணாசலம், இளைஞரணி தலைவர் அர்ஜூன் பாலசிங் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : festival ,Bhaj Kodiyattu ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!