×

திருச்செந்தூர் சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

திருச்செந்தூர், மார்ச் 8: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள சீரடி சாய்மிஷன் சாய் பாபா ஆலயத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி உற்சவர் சீரடி சாய்பாபாவிற்கு இரவு 8 மணிக்கு முதல்கால பூஜையின்போது பழங்கள் அலங்காரமும், இரவு 10.30 மணிக்கு 2ம் கால பூஜையின்போது காய்கறிகள் அலங்காரமும், அதிகாலை 1.30 மணிக்கு 3ம் கால பூஜையின் போது மலர் அலங்காரமும், அதிகாலை 4.30 மணிக்கு 4 கால பூஜையின்போது வில்வ இலை அலங்காரம், பாபா சிவன் அலங்காரமும் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

Tags : Devotees ,Tiruchendur Saibaba Temple ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி