×

ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை, மார்ச் 8: தமிழ்நாட்டை  சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொள் வதற்காக தமிழக  அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறித் தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட  பிற்படுத்தப்பட்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகங் களில் இருந்து  கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள், மற்றும்  விண்ணப்பபடிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in  என்ற  இணையதள முகவரியில் காணலாம்.

விண்ணப்பபடிவங்களை படியிறக்கம் செய்தும்  பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து  இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்”  என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர்  பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சேப்பாக்கம் சென்னை என்ற முகவரிக்கு  அனுப்பப்பட வேண்டும். ஜெருசலேம் செல்ல விருப்பம் உள்ளவர்கள் உரிய காலத்தில்  உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி  வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags : Jerusalem ,travelers ,
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...