×

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருமயம்,மார்ச் 8: திருமயம் அருகே நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் 34ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமை யாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள திட்டாணி கருப்பர் கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 15ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்த யம் நேற்று நடந்தது. இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை, அறந்தா ங்கி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரியமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.

பெரிய மாடு போய்வர 8 மைல் தூரமும், சிறிய மாடு போய்வர 6 மையில் தூரமும் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை விராமதி தையல்நாயகி, 2ம் பரிசு அய்யம்பாளையம் காமாட்சி   அம்மன், 3ம் பரிசு திருவாப்பாடி பெரியசாமி, 4ம் பரிசு பூவாண்டிபட்டி நாச்சி யார் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவுகளில் வெற்றி முதல் 4 மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டி நடை பெற்ற நெய்வாசல்-திருப்பத்தூர் சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நெய்வாசல் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags : winner ,elf wrestling race ,winners ,Thirumayam ,
× RELATED கரூரில் அதிமுக-வினர் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா!!