×

ஆற்று பாலத்திலிருந்து விழுந்த முதியவர் சாவு

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 8: திருக்காட்டுப்பள்ளியில் ஆற்று பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வடக்குவாடி தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (75). இவர் தினம்தோறும் காலையில் உடற்பயிற்சிக்காக காவிரி ஆற்றுப்பாலம் வழியாக சிறிது தூரம் நடந்து செல்வார். நேற்று முன்தினம் (6ம் தேதி) காலை நடந்து சென்று திரும்பி வரும்போது குடமுருட்டி ஆற்று பாலத்தில் உட்கார்ந்தார். அப்போது மயக்கம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : river bridge ,
× RELATED 3 மாதங்களுக்கு முன் வெள்ளத்தில்...