×

பைக் விபத்தில் வாலிபர் பலி

ஜெயங்கொண்டம், மார்ச் 8: ஜெயங்கொண்டம் அடுத்த மருதூர் வடக்குப்பட்டியை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன் (28). இவர் நண்பரான சக்திவேலுடன் (20) பைக்கில் ஜெயங்கொண்டத்துக்கு சென்றார். இலையூர் பாலம் அருகே பைக் கவிழ்ந்து 2 பேரும் காயமடைந்தனர். இதில் சக்திவேல் பலியானார். சுப்பிரமணியன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் (பொ) மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : guy ,bike accident ,
× RELATED ஷ்ரேயாஸ் வருகை டெல்லிக்கு பெரிய பலம்: பயிற்சியாளர் கைப் உற்சாகம்